கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகள் குறித்து புகாரளிப்பது எப்படி?  - இதோ அரசின் வழிகாட்டுதல்!

கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகள் குறித்து புகாரளிப்பது எப்படி? - இதோ அரசின் வழிகாட்டுதல்!

கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகள் குறித்து புகாரளிப்பது எப்படி? - இதோ அரசின் வழிகாட்டுதல்!
Published on

கொரோனா தடுப்பூசி : பக்க விளைவுகளை கண்காணித்து மற்றும் புகாரளிப்பது எப்படி என்பது குறித்த வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் 60 வயதானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டது. கடந்த 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகளை எப்படி கண்காணித்து மற்றும் புகாரளிப்பது என்பது குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது அரசு. 

அது என்னென்ன என பார்ப்போம்... 

1.கேளுங்கள் 

தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருகை தந்திருக்கும் நபரிடம் ஏதேனும் மருந்தை இதற்கு முன்னதாக எடுத்துக்கொண்டால் அவருக்கு அலர்ஜி ஏற்படுமா? என கேளுங்கள். அவருக்கு அலர்ஜி (ஒவ்வாமை) ஏற்படும் என்றால் அது சார்ந்த சிறப்பு மருத்துவரிடம் ஆலோசனைக்கு அனுப்ப வேண்டும். 

2.தடுப்பூசி செலுத்தி கொள்பவரின் உடல் ஆரோக்கியத்தை கண்காணியுங்கள். 

3.தெரிவியுங்கள்

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னர் உடலில் அந்த தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி வளரும் என தெரிவியுங்கள். தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு ஏற்படும் பொதுவான பக்க விளைவுகளை தெளிவுப்படுத்துங்கள். 

4.தடுப்பூசி செலுத்துங்கள் 

5.தடுப்பூசி செலுத்திய பிறகு சம்மந்தப்பட்ட நபரை 15 நிமிடங்கள் வரை கண்காணியங்கள். பொதுவாகவே சில மருந்துகளை எடுத்துக் கொண்டால் அலர்ஜி ஏற்படும் நபர்களை 30 நிமிடங்கள் வரை கண்காணியுங்கள். 

6.தகவல் தெரிவியுங்கள் 

தடுப்பூசி செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் சம்மந்தப்பட்ட நபருக்கு எதிர்பாராத விதமாக ஏதேனும் ரியாக்ஷகன் இருந்தால் சிறப்பு மருத்துவ வல்லுனர்களிடம் தெரிவியுங்கள். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com