கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பொதுமுடக்க நீட்டிப்பு குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய முதலமைச்சர் “அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தரமான உணவை கொடுப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
டெங்கு பரவாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். எங்கு நோய்தொற்று இருக்கிறதோ அங்கு அதிக பரிசோதனை செய்ய வேண்டும். நோய் பரவலை கட்டுப்படுத்த சிறப்பாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பாக சேவை செய்து வரும் மருத்துவ முன்களப்பணியாளர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.