ஸ்ரீபெரும்புதூரில் கொரோனாவுக்கு கிராம நிர்வாக அலுவலர் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூரில் கொரோனாவுக்கு கிராம நிர்வாக அலுவலர் உயிரிழப்பு
ஸ்ரீபெரும்புதூரில் கொரோனாவுக்கு கிராம நிர்வாக அலுவலர் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் கொரோனாவிற்கு இரண்டாவது கிராம நிர்வாக அலுவலர் உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம்த்தில் இதுவரை கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,742 உயர்ந்துள்ளது. இவர்களில் 13324 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் மொத்தமாக 212 உயிரிழந்துள்ளனர். தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2206 சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் கொரோனாவிற்கு இரண்டாவது கிராம நிர்வாக அலுவலர் உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் கொரோனாவிற்கு இரண்டாவது கிராம நிர்வாக அலுவலர் உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதூர் வட்டம் மேவளுர்குப்பம் கிராமநிர்வாக அலுவலர் வி.மோகன் என்பவருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார். அதேபோல் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மே மாதம் சுங்குவார்சத்திரம் அடுத்த ஓ.எம்.மங்களம் கிராம நிர்வாக அலுவலர் ராஜாராம் என்பவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோல கடந்த வாரம் ஸ்ரீபெரும்புதூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி என்பவர் நோய்த்தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கொரோனாவிற்கு இதுவரை மூன்று அரசு ஊழியர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com