மதுரை: மத்திய சிறையில் பெண் கைதிக்கு கொரோனா; சக கைதிகளையும் பரிசோதிக்க திட்டம்

மதுரை: மத்திய சிறையில் பெண் கைதிக்கு கொரோனா; சக கைதிகளையும் பரிசோதிக்க திட்டம்
மதுரை:  மத்திய சிறையில் பெண் கைதிக்கு கொரோனா; சக கைதிகளையும் பரிசோதிக்க திட்டம்

மதுரை மத்திய சிறையில் பெண் கைதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாநகர காவல் துறைக்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம், முத்துப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வழக்கில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அந்த பெண் விசாரணை கைதிக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெண் கைதி சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெண் கைதிக்கு நோய் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறையில் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. மேலும் உடன் இருந்த கைதிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த சிறை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com