தமிழகத்தில் ஒரேநாளில் 1,985 பேருக்கு கொரோனா – 30 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் ஒரேநாளில் 1,985 பேருக்கு கொரோனா – 30 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் ஒரேநாளில் 1,985 பேருக்கு கொரோனா – 30 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று மேலும் 1,985 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியிருக்கிறது. ஒருநாளில் 1,60,501 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1985 ஆக உள்ளது.  தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,71,383 ஆக உள்ளது.

தமிழகத்தில் இன்று ஒருநாளில் மட்டும் 30 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 34,260ஆக உயர்ந்திருக்கிறது.

இன்று ஒருநாளில் 1,908 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், தமிழகத்தில் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 25,16,938 ஆக உள்ளது. தற்போது தமிழகத்தில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 20,185 ஆக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com