தமிழகம்: ஒரேநாளில் 1,957 பேருக்கு கொரோனா

தமிழகம்: ஒரேநாளில் 1,957 பேருக்கு கொரோனா

தமிழகம்: ஒரேநாளில் 1,957 பேருக்கு கொரோனா
Published on

தமிழகத்தில் ஒரேநாளில் 1,957 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தவர்களில் 28 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் 23 பேரும் தனியார் மருத்துவமனையில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். 2,068 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 20,385 பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இணைநோய்கள் ஏதுமில்லாதவர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 50 வயதுக்குட்பட்டவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

12 வயதிற்குட்பட்ட 109 சிறார்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. 26 மாவட்டங்களில் இறப்பு எண்ணிக்கை இல்லை. சென்னையை பொறுத்தவரை மேலும் 189 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com