இந்தியாவில் ஒரேநாளில் 12,428 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் ஒரேநாளில் 12,428 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் ஒரேநாளில் 12,428 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் ஒரேநாளில் 12,428 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 15,906 ஆகவும், நேற்று 14,306 ஆகவும் பதிவான நிலையில, இன்று 12,428 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரேநாளில் 15,951 பேர் கொரேனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இந்தியாவில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,35,83,318ல் இருந்து 3,45,67,367ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 356 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,54,712-ல் இருந்து 4,55,068ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,63,816 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 102.94 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 5,67,86,842 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com