கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த நபர் குணமடைந்தார்: அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த நபர் குணமடைந்தார்: அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த நபர் குணமடைந்தார்: அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நபர் குணமடைந்தார் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை 23 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இப்போது வரை மதுரையைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்தியாவில் இதுவரை 606 பேருக்கு கொரோனா பாதிப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்துள்ளார், அதில், "டெல்லியில் இருந்து சென்னை வந்த நபர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சைக்கு அவரின் உடல்நிலை சீராக ஒத்துழைத்தது. இதன் காரணமாக அவர் விரைவாக குணமடைந்து வருகிறார். அவருக்கு மேற்கொண்டு நடத்தப்பட்ட இரண்டு சோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து 2 நாளில் அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட இருக்கிறார்" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com