சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு
Published on

கொரோனா ஊரடங்கு காரணமாக சுமார் 6 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் தொடங்கப்பட்டது.

காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரயில்கள் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. விமான நிலையத்திலிருந்து வண்ணாரப்பேட்டை வரை செல்லும் மெட்ரோ ரயில் 7-ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. இன்றுமுதல் பரங்கிமலையிலிருந்து கோயம்பேடு வழியாக சென்ட்ரல் வரை செல்லும் ரயில் சேவையும் துவங்கியுள்ளது.

இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையைக் கருத்தில்கொண்டு நாளை முதல் மெட்ரோ சேவை இரவு 9 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 'பீக்' அவர்ஸ் எனப்படும் மக்கள் அதிகம் கூடும் நேரமான காலை 8.30 முதல் 10.30 வரையிலும், மாலை 5 முதல் 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளிக்கு ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க பயணச்சீட்டு வாங்கும்முறை, தனிமனித இடைவெளி மற்றும் சில விதிமுறைகளுடன் ரயில் சேவை இயங்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com