சென்னையில் கொரோனா மையங்களுக்கான தொலைபேசி எண்கள் அறிவிப்பு..!
சென்னையில் கொரோனா அறிகுறி இருந்தால் தொடர்புகொள்ள மண்டல வாரியாக தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாகச் சென்னையில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேலான எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இன்று மட்டும் சென்னையில் 1,392 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,937 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் சென்னையில் இதுவரை 12,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 13,085 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 260 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சியாக மண்டல வாரியாக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருவொற்றியூர் - 044 46556301, மணலி - 044 46556302, மாதவரம் -044 46556303, தண்டையார்பேட்டை - 044 46556304, ராயபுரம் - 044 46556305, திரு.வி.க நகர் - 044 46556306, அம்பத்தூர் - 044 46556307, அண்ணாநகர் - 044 46556308, தேனாம்பேட்டை - 044 46556309, கோடம்பாக்கம் - 044 46556310, வளசரவாக்கம் - 044 46556311, ஆலந்தூர் - 044 46556312, அடையாறு - 044 46556313, பெருங்குடி - 044 46556314, சோழிங்கநல்லூர் - 044 46556315 என தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதவிர சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தைத் தொடர்புகொள்ள 044 46122300 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம் எனப்பட்டுள்ளது.