இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துகொண்டிருக்கும் வேளையில், தென் ஆப்பிரிக்காவில் ‘ஓமிக்ரான்’ எனும் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கவலைக்குரிய வகையைச் சோ்ந்ததாக ஒமிக்ரானை உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவை தொடர்ந்து போட்ஸ்வானா, பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், இஸ்ரேல், இத்தாலி, செக் குடியரசு, ஹாங்காங், ஆஸ்திரேலியா, கனடா உட்பட பல்வேறு நாடுகளுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளது.