பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி

பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி
பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் தினந்தோறும் 5000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. பல பிரபலங்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் என பலரும் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தமிழக பாஜக-வின் மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ‘’இன்று காலை எனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். நன்றாக உள்ளேன். உங்களுடைய பிராத்தனை, ஆசீர்வாதம் மற்றும் நல்வாழ்த்துகளுடன் விரைவில் குணமடைவேன். செய்தி அனுப்பிய அனைவருக்கும் நன்றி. ஜெய் ஹிந்த்.

விரைவில் குணமடைய வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்’’ என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com