தமிழகத்தில் வரும் 29 முதல் 31ஆம் தேதிக்குள் கொரோனா பரவல் உச்சத்தை தொடும் என ஆய்வுத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சூத்ரா என்ற கணிதவியல் கோட்பாடு அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக ஹைதராபாத் ஐஐடி பேராசிரியர் வித்யாசாகர் தெரிவித்தார். தமிழகத்தில் மே 29-இல் இருந்து 31க்குள் கொரோனா உச்சம் தொட்டு பின்னர் குறையும் என்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாளுக்குள் கொரோனா உச்சம் தொடும் என்றும் வித்யாசாகர் தெரிவித்தார்.
மகாராஷ்ட்ரா, டெல்லி, குஜராத், உத்தரப்பிரேதசம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்கள் உச்சத்தை கடந்து தற்போது இறங்குமுகத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழகம், புதுச்சேரி போல பஞ்சாப், இமாச்சல பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் இனிமேல்தான் உச்சம் தொட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்