இந்தியா: இன்று ஒரே நாளில் 8,586 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியா: இன்று ஒரே நாளில் 8,586 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியா: இன்று ஒரே நாளில் 8,586 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 8,586 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்கள்படி, நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 8,586 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9,680 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை மொத்தமாக 4,37,33,624 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இன்று மட்டும் 48 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 5,27,416 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் தற்போது 96,506 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனா தினசரி சதவீதம் 2.19 ஆகவும், வாராந்திர சதவீதம் 3.31 ஆகவும் உள்ளது. நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.59 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.19 ஆகவும் உள்ளது. தேசிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் இதுவரை 210.31 கோடி 94.02 கோடி 2-வது தவணை மற்றும் 14.07 கோடி (முன்னெச்சரிக்கை தவணை) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 29,25,342 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: ’கொரோனாவில் பெற்றோரை இழந்த மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும்’ - மகாராஸ்டிரா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com