கொரோனா: சென்னையில் இன்று மட்டும் 8 பேர் உயிரிழப்பு

கொரோனா: சென்னையில் இன்று மட்டும் 8 பேர் உயிரிழப்பு
கொரோனா: சென்னையில் இன்று மட்டும் 8 பேர் உயிரிழப்பு

சென்னையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதில் சென்னையில் மட்டும் இதுவரை 23,298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இன்று மட்டும் சென்னையில் சிகிச்சைப் பெற்று வந்த 8 பேர் சிகிச்சைப் பலனின்றி கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேரின் சடலங்களையும் பாதுகாப்பான முறையில் அடக்கம் அல்லது தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

இதேபோல், ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஓமாந்தூரார் மருத்துவனையில் நேற்று இரவு முதல் தற்போது வரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com