சென்னையில் 120 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு - தமிழகம் முழுவதும் 772 பேருக்கு தொற்று

சென்னையில் 120 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு - தமிழகம் முழுவதும் 772 பேருக்கு தொற்று
சென்னையில் 120 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு - தமிழகம் முழுவதும் 772 பேருக்கு தொற்று

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 772 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் நேற்று 775 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில், இன்று 772 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1,02,383 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தினசரி ஒருநாள் பாதிப்பு 772 ஆக உள்ளது. சென்னையில் நேற்று 126 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 120 ஆக குறைந்திருக்கிறது. 12 வயதிற்குட்பட்ட 56 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கொரோனாவால் இன்று 13 பேர் இறந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,349 ஆக உயர்ந்திருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் 7 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 8,953ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து 884 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 26,73,448 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com