இந்தியாவில் 58 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதி

இந்தியாவில் 58 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதி
இந்தியாவில் 58 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதி

இந்தியாவில் 58 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா உட்பட பல நாடுகள் இங்கிலாந்துக்கும் தனக்குமான விமான போக்குவரத்து சேவைக்கு தடை விதித்தது. இந்தியாவில் 6 மையங்களில் உருமாறிய கொரோனா வைரஸ் பரிசோதனையானது நடைபெற்று வரும் நிலையில் நேற்று 38 நபர்களுக்கு புதிய கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று புனேவில் உள்ள ஆய்வகத்தில் நடைபெற்ற பரிசோதனையில், புதிதாக 20 நபர்களுக்கு உருமாறிய கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் தற்போது இந்தியாவில் 58 நபர்களுக்கு உருமாறிய கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நாளை இந்தியா பிரிட்டனுக்குமான விமானபோக்குவரத்து தொடங்க உள்ள நிலையில், வருகின்ற 8 ஆம் தேதி பிரிட்டனுக்கும் இந்தியாவிற்கு மிடையேயான போக்குவரத்து தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com