தமிழகத்தில் 1,916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 1,933ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை இன்று 1,916ஆக குறைந்திருக்கிறது.
1,60,306 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 1,916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று 211 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று 219 ஆக அதிகரித்துள்ளது. 12 வயதிற்குட்பட்ட 122 சிறார்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது அதிகரித்து வருகிறது.
கொரோனாவால் 34 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,496ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 22 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 12 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் இணைநோய்கள் இல்லாதோர் 6 பேர். 50 வயதுக்குட்பட்டோர் 7 பேர்.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 20,427ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 1,866 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,31,962 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

