தமிழகத்தில் ஒரேநாளில் 1,682 பேருக்கு கொரோனா; 21 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் ஒரேநாளில் 1,682 பேருக்கு கொரோனா; 21 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் ஒரேநாளில் 1,682 பேருக்கு கொரோனா; 21 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,682 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் நேற்று 1,647 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில், இன்று 1,682 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1,51,802 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தினசரி ஒருநாள் பாதிப்பு 1,682ஆக உள்ளது. சென்னையில் நேற்று 198 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 194 ஆக குறைந்திருக்கிறது. 12 வயதிற்குட்பட்ட 90 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கொரோனாவால் இன்று 21 பேர் இறந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,400 ஆக உயர்ந்திருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் 15 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் இணைநோய்கள் இல்லாதோர் ஒருவர். 50 வயதுக்குட்பட்டோர் 4 பேர்.

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 17,027ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து 1,627 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,97,943 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com