இந்தியாவில் 166 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் 166 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் 166 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் அதிகப்பட்சமாக 45 பேருக்கும், கேரளாவில் 27 பேருக்கும், ஹரியானாவில் 17 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் உத்தரப்பிரதேசத்தில் 17 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 14 பேரும், டெல்லியில் 12 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

லடாக்கில் 8 பேரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. ராஜஸ்தானில் 7 பேருக்கு கொரோனா தொற்றுள்ள நிலையில் தெலங்கானாவில் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பது தெரிய‌வந்துள்ளது. தமிழ்நாட்டில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஆந்திரா, ஒடிசா மற்றும் பாண்டிச்சேரியில் தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. இந்தியாவில் கொரோனா தொற்று தாக்கத்தால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த 15 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com