இந்தியாவின் சினிமா தலைநகரமாக ஐதரபாத்தை மாற்ற வேண்டும் - பிரபல நடிகர் விருப்பம்

இந்தியாவின் சினிமா தலைநகரமாக ஐதரபாத்தை மாற்ற வேண்டும் - பிரபல நடிகர் விருப்பம்
இந்தியாவின் சினிமா தலைநகரமாக ஐதரபாத்தை மாற்ற வேண்டும் - பிரபல நடிகர் விருப்பம்

ஐதராபாத்தை இந்தியாவின் திரைப்பட தலைநகரமாக்க வேண்டும் என்று பிரபல நடிகர் ராணா டகுபதி விருப்பம் தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் பிஜுமேனன், பிருதிவிராஜ் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. மிகப்பெரிய வெற்றியை பெற்றதையடுத்து இந்தப் படம் தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் மற்றும் ராணா நடிப்பில் ‘பீம்லா நாயக்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தின் வெளியீட்டு முன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ராணா டகுபதி, “திரைப்பட உலகில் உள்ள பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளேன். எனினும், பவன் கல்யாண் மட்டும் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இனி அடுத்தடுத்து வரவிருக்கும் எனது திரைப்படங்களில், பவன் கல்யாணின் தாக்கம் நிச்சயம் இருக்கும். சினிமா துறையின் வளர்ச்சிக்காக, இந்தியாவின் திரைப்பட தலைநகராக ஐதராபாத்தை மாற்ற பாடுபடுவேன். அதற்காக எனது ஒத்துழைப்பையும் தருவேன்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com