விஸ்வாசம் படம் இங்கெல்லாம் வெளியாவதில் சந்தேகம்

விஸ்வாசம் படம் இங்கெல்லாம் வெளியாவதில் சந்தேகம்

விஸ்வாசம் படம் இங்கெல்லாம் வெளியாவதில் சந்தேகம்
Published on

விஸ்வாசம் திரைப்படம் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இதற்காக டிக்கெட் முன்பதிவு பல திரையரங்குகளிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. 15 மாதங்களுக்கு பிறகு அஜித்தை திரையில் பார்க்க அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர். அதேவேளையில் நாளை பேட்ட திரைப்படமும் வெளியாவதால் திரையரங்குகள் திருவிழாக்கோலமாக காட்சியளிக்க உள்ளன. 

இந்நிலையில் விஸ்வாசம் திரைப்படம் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளின் விஸ்வாசம் விநியோம உரிமையை சாய்பாபா என்பவர் பெற்றுள்ளார். இதற்காக சினிமா பைனான்சியர் உமாபதியிடம் ரூ.1 கோடி கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் கடன் தொகையில் ரூ.78 லட்சத்தை திருப்பி தரவில்லை என்றும் பணத்தை திருப்பித்தரும் வரை விஸ்வாசம் திரைப்படத்தை திரையிட தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். 

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட சாய்பாபா சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் உமாபதிக்கு கொடுக்க வேண்டிய பாக்கித்தொகையில் ரூ.35லட்சத்தை காசோலையாக தருவதாகவும், மீதித்தொகையை 4 வாரத்துக்குள் கொடுத்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார். கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்தால் இன்று பிற்பகல் விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com