நல்லா இருக்கிற தமிழ்நாட்டை ஏன் பிரிக்கணும்?- நடிகர் வடிவேலு

நல்லா இருக்கிற தமிழ்நாட்டை ஏன் பிரிக்கணும்?- நடிகர் வடிவேலு
நல்லா இருக்கிற தமிழ்நாட்டை ஏன் பிரிக்கணும்?- நடிகர் வடிவேலு

நல்லா இருக்கிற தமிழ்நாட்டை ஏன் பிரிக்கணும்; நாடு, நாடு என தனித்தனியாக பிரிந்தால் என்னவாவது? இதெல்லாம் கேட்கும்போதே தலை சுற்றுகிறது என்று கொங்குநாடு குறித்த கேள்விக்கு நடிகர் வடிவேலு பதிலளித்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்கினார் நடிகர் வடிவேலு. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் " முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக எளிமையாக இருக்கிறார். குடும்பத்தில் ஒரு நபராக நினைத்து என்னிடம் பேசினார்.

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 5 லட்சம் நன்கொடை கொடுத்துள்ளேன். ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் உலகமே உற்றுப் பார்க்கும் அளவில் கொரோனாவை கட்டுப்படுத்தி உள்ளார்" என்றார்.

மேலும் பேசிய அவர் "தமிழக முதல்வரே தெருத்தெருவாக சென்று மக்கள் தடுப்பூசி போட முகாம் அமைத்து வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். யார் மனதும் புண்படுத்தாமல் ஒவ்வொரு திட்டங்களும் செயல்படுத்தி வருகிறார். தமிழக மக்களுக்கு பொற்கால ஆட்சியை அமைத்துக் கொடுத்துள்ளார். கொரோனா தடுப்பு ஊசியை செலுத்தி மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும். நான் அரசியல் பேசவில்லை. தமிழ்நாடு நன்றாக இருக்கிறது அதை ஏன் பிரிக்கவேண்டும்" என்றார் வடிவேலு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com