நடிகர் சங்கக் கட்டிடத்தை நாமே கட்டுவோம்: ஆவேசமான அஜித்

நடிகர் சங்கக் கட்டிடத்தை நாமே கட்டுவோம்: ஆவேசமான அஜித்
நடிகர் சங்கக் கட்டிடத்தை நாமே கட்டுவோம்: ஆவேசமான அஜித்

மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலை விழாவில் நடிகர் அஜித் கலந்துகொள்ளவில்லை. இதற்கான காரணம் என்னவென்று நடிகர் எஸ்.வி.சேகர் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் சங்கக் கட்டிடம் கட்டுவதற்கானப் பணியை, நடிகர் சங்கம் முன்னெடுத்து வருகிறது. இதற்கான நிதி திரட்டும் பணியில் நடிகர் சங்கம் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக, கடந்த 6ஆம் தேதி மலேசியாவில் நட்சத்திர கலை நிகழ்ச்சி மற்றும் கிரிக்கெட் போட்டியை நடத்தியது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால், கார்த்தி உட்பட முன்னணி நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். ஆனால் விஜய், அஜித், தனுஷ், சிம்பு, சந்தானம், அரவிந்த்சாமி, சிபிராஜ், ஜெய் உட்பட பல நடிகர், நடிகைகள் கலந்துகொள்ளவில்லை. இவர்கள் அனைவருக்கும் தகவல் அனுப்பியும் எந்தவித காரணமும் இன்றி அவர்கள் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நட்சத்திர கலை விழாவில் நடிகர் அஜித் ஏன் கலந்துகொள்ளவில்லை என நடிகர் எஸ்.வி.சேகர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அஜித்தை மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர விழாவுக்கு அழைத்தபோது, ’ஏற்கனவே மக்களிடம் இருந்து வசூலிக்கும் தியேட்டர் டிக்கெட்டில் இருந்துதான் நாம் நிறைய சம்பாதிக்கிறோம். அதனால் நடிகர் சங்க கட்டிடத்துக்கு அவர்களிடம் இருந்து பணம் வாங்காமல் நாமே பணம் போட்டுக் கட்டலாம்’ என்றார். அதனால்தான் அவர் மலேசியாவில் நடைபெற்ற விழாவிலும் கலந்துகொள்ளவில்லை” என எஸ்.வி.சேகர் தெரிவித்தார். நடிகர் சங்கத்தின் அறங்காவலர் பதவியில் இருந்து எஸ்.வி.சேகர் சமீபத்தில் ராஜினாமா செய்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com