மகனின் பெயரையே டைட்டிலாக வைத்த விஷ்ணு விஷால் - நெகட்டிவ் ரோலில் செல்வராகவன்

மகனின் பெயரையே டைட்டிலாக வைத்த விஷ்ணு விஷால் - நெகட்டிவ் ரோலில் செல்வராகவன்
மகனின் பெயரையே டைட்டிலாக வைத்த விஷ்ணு விஷால் - நெகட்டிவ் ரோலில் செல்வராகவன்

தனது புதியப் படத்திற்கு நடிகர் விஷ்ணு விஷால் மகனின் பெயரையே டைட்டிலாக வைத்து, ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

‘எஃப்.ஐ.ஆர்.’ படத்தைத் தொடர்ந்து ‘மோகன்தாஸ்’, ‘கட்டா குஸ்தி’ உள்ளிட்டப் படங்களை கைவசம் வைத்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். இந்தப் படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக, புதியப் படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார் விஷ்ணு விஷால். கடந்த 2010-ம் ஆண்டு முதல் கௌதம் வாசுதேவ் மேனனிடம் இணை இயக்குநராக இருந்த பிரவீன் தற்போது விஷ்ணு விஷாலின் படத்தை இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். மேலும், ‘எஃப்.ஐ.ஆர்.’ படத்தை இயக்கிய மனு ஆனந்துடன் அந்தப் படத்தில் எழுத்து, இயக்கத்தில் உதவிப் புரிந்துள்ளார்.

இந்நிலையில், விஷ்ணு விஷால் - பிரவீன் இயக்கும் புதியப் படம் குறித்த ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. விஷ்ணு விஷாலே இந்தப் படத்தை தயாரித்து நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் காவல்துறையை சேர்ந்தவராக நடிக்கிறார். இந்தப் படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் வாணி போஜன் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குநர் செல்வராகவன் நடிக்கின்றார்.

வருகிற 5-ம் தேதி முதல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கஉள்ளநிலையில், தனது மகனின் பெயரான ‘ஆர்யன்’ என்பதையே படத்திற்கு டைட்டிலாக நடிகர் விஷ்ணு விஷால் வைத்துள்ளார். இதுமறக்க முடியாத டைட்டிலாக தனக்கு இருக்க போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைக்கிறார். சான் லோகேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளார். விஷ்ணு சுபாஷ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். ஒரே கட்டமாக படத்தை எடுத்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com