மன்னிப்பு கேட்டும் தீரவில்லை பிரச்னை

மன்னிப்பு கேட்டும் தீரவில்லை பிரச்னை

மன்னிப்பு கேட்டும் தீரவில்லை பிரச்னை
Published on

விஷாலின் மன்னிப்பை ஏற்க தயாரிப்பாளர்கள் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்ததால், ‌‌நடிகர் விஷாலை இடைநீக்கம் செய்து தயாரிப்பாளர் சங்கம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் மீதான விசாரணையில், விஷால் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்தால் அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பரிசீலிக்க‌ப்படும் என தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விஷால் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரினர். இதனால் விஷால் மீதான சஸ்பெண்டு நடவடிக்கை நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது

இந்நிலையில் வழக்கு குறித்த விசாரணை இன்று வந்தபோது தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது . இதில் நடிகர் விஷாலை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து நீக்கிய பிறகும் தொடர்ந்து அவர் சங்கத்திற்கு எதிராக அவதூறாக பேசி வருவதால் அவரது மன்னிப்பை ஏற்க முடியாது என்றும். அவரது சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com