சிகிச்சை பெற்று வந்த இசை அமைப்பாளர் பாலபாஸ்கர் மரணம்

சிகிச்சை பெற்று வந்த இசை அமைப்பாளர் பாலபாஸ்கர் மரணம்
சிகிச்சை பெற்று வந்த இசை அமைப்பாளர் பாலபாஸ்கர் மரணம்

விபத்தில் சிக்கி சிகிச்சைப் பெற்று வந்த இசையமைப்பாளரும் வயலின் இசைக் கலைஞருமான பாலபாஸ்கர் சிகிச்சை பலனின்றி மரணமடைந் தார். அவருக்கு வயது 40.

கேரளாவைச் சேர்ந்த பிரபல வயலின் இசைக்கலைஞர் பாலபாஸ்கர். இவர் சில மலையாள படங்களுக்கு இசை அமைத்துள்ளார். கேரளாவைத் தாண்டியும் புகழ்பெற்றிருந்த இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு தேஜஸ்வினி என்ற 2 வயது மகள் இருந்தார். திருமணம் முடிந்து 15 வருட ங்களுக்கு பிறந்தவர் இவர். கடந்த வாரம் திருச்சூரில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு குடும்பத்துடன் இவர்கள் காரில் திருவனந்தபுரம் திரும் பினர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே தேஜஸ்வினி உயிரிழந் தார். படுகாயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். 

பாலபாஸ்கருக்கு தலை மற்றும் முதுகில் கடுமையான காயம் ஏற்பட்டிருந்தது. அவர் தொடர்ந்து ஐசியூவில் இருந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்ததாக டாக்டர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை மார டைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்தார். அவர் மனைவி மற்றும் கார் டிரைவர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பால பாஸ்கரின் மறைவு கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளாது. அவருக்கு கேரள திரையுலகம் மற்றும் இசை கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com