ஓடிடியில் வரவேற்பு பெறும் விமலின் ‘விலங்கு’ வெப் சீரிஸ் - டிவியில் ஒளிபரப்பாகிறது

ஓடிடியில் வரவேற்பு பெறும் விமலின் ‘விலங்கு’ வெப் சீரிஸ் - டிவியில் ஒளிபரப்பாகிறது
ஓடிடியில் வரவேற்பு பெறும் விமலின் ‘விலங்கு’ வெப் சீரிஸ் - டிவியில் ஒளிபரப்பாகிறது

நடிகர் விமல் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள கிரைம் த்ரில்லர் ‘விலங்கு’ வெப் தொடர், வரும் ஞாயிற்றுக்கிழமை ஜீ தமிழ் டிவியில் ஒளிப்பரப்பாக உள்ளது.

இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில், விமல் நடிப்பில் ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியுள்ள வெப் தொடர் ‘விலங்கு’. எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் சார்பில் மதன் தயாரித்துள்ள இந்த வெப் தொடரில் இனியா, முனிஷ்காந்த், பாலசரவணன், ரேஷ்மா, ஆர்.என்.ஆர் மனோகர் ஆகியோர் நடித்துள்ளனர். அஜீஷ் இசையமைக்க, கணேஷ் படத்தொகுப்பு செய்ய, தினேஷ் புருஷோத்தம்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த வெப் தொடர், 7 எபிசோடுகளோடு ஒரு புலனாய்வு தொடராக உருவாகியுள்ளது. திருச்சியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

காவல்துறையை திக்குமுக்காட வைக்கும் ஒரு மர்மமான வழக்கை, காவல்துறை அதிகாரியான விமல் விசாரிக்க ஆரம்பிக்கிறார். அந்த விசாரணையில் ஏற்படும் திருப்பங்களே இந்தத் தொடர். வழக்கமாக வரும், குற்றப்பின்னணி கொண்ட க்ரைம் போலீஸ் கதைகள்போல் அல்லாமல் ஒரு மாறுபட்ட கதைக்களத்தை இந்தத் தொடர் கொண்டுள்ளது. கலை இயக்குநராக துரைராஜ் பணியாற்றியுள்ளார். ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘விலங்கு’ வெப் சீரிஸ் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்தத் தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு, சிறப்புக் காட்சியாக ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com