உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் இயக்கத்தவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்ட விஜய்!

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் இயக்கத்தவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்ட விஜய்!
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் இயக்கத்தவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்ட விஜய்!

”விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுடன் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார்” என்று தெரிவித்துள்ளார் விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.

செய்தியாளர்களை சந்தித்த மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட நிர்வாகிகளை வெற்றியடைய செய்த மக்களுக்கு நடிகர் விஜய் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

மேலும், ”சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 129 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதில், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 2 நபர்களும், துணைத் தலைவர் பதவிக்கு 12 நபர்களும் மற்றவர்கள் வார்டு உறுப்பினர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வெற்றிபெற்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவர்களுக்கு ’ஆல் த பெஸ்ட்’ட்டும் கூறினார்.

மத்திய மாநில அரசிடம் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேட்டு மக்களுக்கு உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என நடிகர் விஜய் அறிவுறித்தினார்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்த 11 அம்சம் கொண்ட திட்ட படிவத்தை அளித்துள்ளதாகவும் இயக்கத்தில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது தளபதி உரிய நடவடிக்கை எடுப்பார் எனவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com