விஜய் வீட்டின் முன்பு நீண்ட நேரம் காத்திருந்த முன்னாள் நிர்வாகி - காவல்துறையினர் விசாரணை

விஜய் வீட்டின் முன்பு நீண்ட நேரம் காத்திருந்த முன்னாள் நிர்வாகி - காவல்துறையினர் விசாரணை
விஜய் வீட்டின் முன்பு நீண்ட நேரம் காத்திருந்த முன்னாள் நிர்வாகி - காவல்துறையினர் விசாரணை

நடிகர் விஜயை குடும்பத்துடன் சந்திக்க வந்த விஜய் மக்கள் இயக்க முன்னாள் நிர்வாகியை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.

விஜய் மக்கள் இயக்கத்தின் துணை செயலாளராக இருந்த குமார், 2 ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்டார். இந்த நிலையில் குமார் தனது குடும்பத்தினருடன் சென்னை நீலாங்கரையில் நடிகர் விஜய் வீட்டிற்கு அவரை சந்திக்க வேண்டும் எனக் கூறி சென்றுள்ளார். ஆனால் அவரை சந்திக்க விஜய் மறுத்ததாக கூறப்படும் நிலையில், அதன் பின்னரும் வீட்டின் முன்பு நின்றுள்ளார்.

இதனை அறிந்து சென்ற காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர். சம்பள பாக்கியை பெறுவதற்காக விஜய்யை சந்திக்க வந்ததாக அவர் கூறியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com