வீர மரணம் அடைந்த பழனியின் குடும்பத்திற்கு விஜய் ரசிகர்கள் நிதியுதவி

வீர மரணம் அடைந்த பழனியின் குடும்பத்திற்கு விஜய் ரசிகர்கள் நிதியுதவி
வீர மரணம் அடைந்த பழனியின் குடும்பத்திற்கு விஜய் ரசிகர்கள் நிதியுதவி

இந்திய- சீன எல்லையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்குத் தேனி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இந்திய- சீன எல்லையில் நடைபெற்ற மோதலில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி என்ற ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். இநிலையில் அவரின் குடும்பத்திற்குத் தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. நாளை விஜய் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த நிதியை அவரது குடும்பத்திற்கு விஜய் ரசிகர்கள் வழங்கியுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் விஜய்யின் பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் போஸ்டர் அடித்தும், பேனர்கள் வைத்தும் கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த முறை தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்று விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு அதன் நிர்வாகிகள் மூலம் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குச் செலவு செய்யும் பணத்தை, வீரமரணமடைந்த பழனியின் குடும்பத்திற்குத் தேனி விஜய் ரசிகர்கள் வழங்கியுள்ளனர். அதற்கான டிடியை பழனியின் மனைவியிடம் அவர்கள் வழங்கியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com