’சூரரைப் போற்று’ பார்த்துவிட்டு என் நண்பர்கள் அழுதனர்: விஜய் தேவரகொண்டா

’சூரரைப் போற்று’ பார்த்துவிட்டு என் நண்பர்கள் அழுதனர்: விஜய் தேவரகொண்டா
’சூரரைப் போற்று’ பார்த்துவிட்டு என் நண்பர்கள் அழுதனர்: விஜய் தேவரகொண்டா

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில், கடந்த வாரம் வெளியான சூரரைப் போற்று படத்தை பார்த்துவிட்டு பலரும் பாராட்டியும் கொண்டாடியும் வருகிறார்கள். தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டப் இப்படத்தை சினிமாத்துறையினர் மட்டுமல்ல. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட அரசு துறையினர், தொழில்துறையினர் என அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில், சூரரைப் போற்று படத்தைப் பார்த்த ’அர்ஜுன் ரெட்டி’ புகழ் நடிகர் விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் “சூரரைப் போற்று படத்தை எனது நண்பர்களுடன் பார்த்தேன். அதில், மூன்று பேர் அழுதனர். நான் வெளியில் இருந்து ஒரு ஆள் வந்து சாதிப்பதை பார்த்து உணர்ச்சி மிகுதியிலேயே இருந்தேன்” என்று உருக்கமுடன் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து நன்றியும் தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா.

நடிகர் விஜய் தேவாரகொண்டா கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான நோட்டா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு தமிழகத்திலும் குறிப்பிடத்தக்க ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com