நடிகர் விஜய் தேவரகொண்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்?

நடிகர் விஜய் தேவரகொண்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்?
நடிகர் விஜய் தேவரகொண்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்?

’அர்ஜுன் ரெட்டி’ என்ற தெலுங்கு படம் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. தமிழில் ‘நோட்டா’ என்ற படத்தில் அறிமுகமானார். அவருக்கு தமிழகத்திலும் ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் உள்ளனர். தெலுங்கின் பிசியான அவர், தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார். 

’புதன்கிழமை காலை 6 மணி வரை படப்பிடிப்பில் இருந்ததால் உடல் சோர்வு ஏற்பட்டது. காய்ச்சலும் வந்தது. இதனால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். வேறு பிரச்னை ஏதும் இல்லை. அவருக்கு ஓய்வு தேவை. ஆனால் ஓய்வு எடுக்க முடியாதபடி படப்பிடிப்பு இருப்பதால் சோர்வில் இருந்து விடுபடவும் சிகிச்சை பெற்றுள்ளார்’ என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

(டியர் காம்ரேட் படத்தில்...)

பரத் கம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா நடித்துள்ள ’டியர் காம்ரேட்’ என்ற தெலுங்கு படம் அடுத்த மாதம் வெளியாகி றது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் இடம்பெற்றுள்ள முத்தக்காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com