“மக்களிடம் சென்றுசேர வேண்டும் என்றுதான் நினைத்தேன்” - ‘அசுரன்’ பட இயக்குநர் வெற்றிமாறன்

“மக்களிடம் சென்றுசேர வேண்டும் என்றுதான் நினைத்தேன்” - ‘அசுரன்’ பட இயக்குநர் வெற்றிமாறன்
“மக்களிடம் சென்றுசேர வேண்டும் என்றுதான் நினைத்தேன்” - ‘அசுரன்’ பட இயக்குநர் வெற்றிமாறன்

அசுரன் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதற்கு இயக்குநர் வெற்றிமாறன் நன்றி தெரிவித்தார்.

தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. இதுகுறித்து இப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், “விருது என்பது எப்போதும் சந்தோஷம்தான். விருதுகள் கலைஞர்களை ஊக்குவிக்கும். எல்லா படத்திற்குமான கஷ்டம்தான் இந்த படத்திலும். ஆனால் குறுகிய காலத்தில் இந்த படம் எடுக்கப்பட்டதுதான் கூடுதல் சிரமம். நான் எந்த விருது வழங்கினாலும் பாலு மகேந்திராவுக்கு தான் சமர்பிப்பேன். என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்த படம் மக்களின் கஷ்டங்களை வெளிப்படுத்தும் படம். இது மக்களிடம் சென்று சேர வேண்டும் என்றுதான் என நினைத்தேன்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com