இந்நிலையில், இப்போது மீண்டும் ‘மங்காத்தா’ படப் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான நினைவை வெங்கட் பிரபு ஒரு புகைப்படம் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது அஜித், அப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் படப்பிடிப்பு தளத்திலேயே பிரியாணி சமைத்து விருந்து வைத்தார். அத்துடன் அவரே அங்குப் பணியாற்றிய அனைவருக்கும் தன் கையால் பரிமாறி உபசரித்தார். அந்தத் தருணத்தில் அருகிலேயே விஜய்யின் படப்புப்பு தற்செயலாக நடந்துள்ளது. அதனை அறிந்த வெங்கட் பிரபு, விஜய்க்கு அழைப்புக் கொடுத்துள்ளார். அதையேற்று விஜய் விருந்தில் கலந்து கொண்டார். அப்போது விஜய்யும் அஜித்தும் சேர்ந்து ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொண்டுள்ளனர்.