'வாய்தா' நடிகை தீபாவின் காணாமல்போன ஐபோன் மீட்பு - விசாரணையை இறுக்கும் போலீஸ்

'வாய்தா' நடிகை தீபாவின் காணாமல்போன ஐபோன் மீட்பு - விசாரணையை இறுக்கும் போலீஸ்
'வாய்தா' நடிகை தீபாவின் காணாமல்போன ஐபோன் மீட்பு - விசாரணையை இறுக்கும் போலீஸ்

‘வாய்தா’ திரைப்பட நடிகை பவுலின் என்கிற தீபாவின் காணாமல்போன ஐபோன் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை ‘வாய்தா’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை பவுலின் ஜெசிகா என்கிற தீபா, விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவில் உள்ள தன்னுடைய வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தீபா தற்கொலை செய்துகொண்டபோது முதல் ஆளாக வந்து கதவை உடைத்துப் பார்த்த பிரபாகரனிடமிருந்து ஐபோன் மீட்கப்பட்டுள்ளது.

நடிகை தீபா மொத்தமாக பயன்படுத்திய மூன்று செல்ஃபோன்கள், ஒரு டேப் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக கோயம்பேடு போலீசார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட ஐபோனில் தகவல்களோ அல்லது புகைப்படம், வீடியோக்கள் எதுவும் டெலிட் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக தடயவியல் துறையின் ஆய்வுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

நடிகை தீபா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக பிரபாகரனிடம் கோயம்பேடு போலீசார் கிட்டத்தட்ட 3 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தி முடித்துள்ளனர். விசாரணையில் காதலன் சிராஜுதீன் வாங்கி கொடுத்த ஐபோன் என்பதால் அதை தாம் எடுத்து வந்ததாக விசாரணையில் தெரிவித்திருக்கிறார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக சிராஜுதனிடம், தீபா வாக்குவாதம் செய்ததாகவும், அதனைத் தொடர்ந்து சிராஜுதீன் தம்மை உடனடியாக தீபா வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறியதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

கைப்பற்றப்பட்டுள்ள மூன்று செல்போன்கள் மற்றும் டேப்பில் உள்ள விவரங்கள் குறித்தும், இதன் அடிப்படையில் காதலன் சிராஜுதீனிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கோயம்பேடு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் தீபா தற்கொலை செய்து கொண்ட வீட்டிலிருந்து சில நகைகளும் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com