நடிகர் ஷாருக்கானின் வீட்டிற்குள் நுழைய முயற்சி - சுவர் ஏறி குதித்த 2 இளைஞர்கள் கைது!

நடிகர் ஷாருக்கானின் வீட்டிற்குள் நுழைய முயற்சி - சுவர் ஏறி குதித்த 2 இளைஞர்கள் கைது!
நடிகர் ஷாருக்கானின் வீட்டிற்குள் நுழைய முயற்சி - சுவர் ஏறி குதித்த 2 இளைஞர்கள் கைது!

மும்பையில் நடிகர் ஷாருக்கானை பார்ப்பதற்காக அத்துமீறி அவரது பங்களாவின் சுவர் ஏறி குதிக்க முயன்ற இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘பதான்’ திரைப்படம், இதுவரை 1028 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதன்மூலம் அதிகம் வசூலித்த இந்தியப் படங்களில் ‘தங்கல்’, ‘பாகுபலி 2’, ‘கே.ஜி.எஃப். 2’, ‘ஆர்.ஆர்.ஆர்.’ ஆகியப் படங்களைத் தொடர்ந்து ‘பதான்’ திரைப்படம் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. ‘பதான்’ திரைப்படம் ஷாருக்கானுக்கு கம்பேக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ள நிலையில், மும்பை பாந்த்ராவில் இருக்கும் அவரது பங்களாவிற்குள் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைய இளைஞர்கள் இரண்டு பேர் முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடற்கரை அருகில் அமைந்துள்ள ஷாருக்கானின் பங்களாவினை காண்பதற்காகவும், அங்கு நின்று செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காகவும், நாட்டின் பலப் பகுதிகளில் இருந்து ஏராளமான ரசிகர்கள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில், இன்று அதிகாலை 4 மணியளவில் மன்னட் என்று அழைக்கப்படும் ஷாருக்கானின் பங்களாவிற்குள் நுழைய சுவர் ஏறி இருவர் குதித்துள்ளனர். இதனைப் பார்த்த பாதுகாவலர்கள் உடனடியாக அவர்கள் இருவரையும் பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார், 20 முதல் 22 வயதிற்குள் இருந்த அந்த இரண்டு இளைஞர்களையும் காவல்நிலையத்திற்கு கொண்டுச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த இருவரும் ஷாருக்கானின் தீவிர ரசிகர்கள் என்றும், அவரை பார்ப்பதற்காக குஜராத்திலிருந்து இங்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். ஆர்வ மிகுதியில் இவ்வாறு செய்தாலும், அத்துமீறல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவர்கள் மீது வேறு ஏதேனும் குற்ற வழக்குகள் இருக்கிறதா என்று குஜராத் போலீசாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com