\
எஸ்.பி.பி-க்கு எக்மோ கருவியுடன் தீவிர சிகிச்சை - மருத்துவமனை நிர்வாகம்

எஸ்.பி.பி-க்கு எக்மோ கருவியுடன் தீவிர சிகிச்சை - மருத்துவமனை நிர்வாகம்

எஸ்.பி.பி-க்கு எக்மோ கருவியுடன் தீவிர சிகிச்சை - மருத்துவமனை நிர்வாகம்
Published on

பாடகர் எஸ்.பி.பாலசுப்மணியத்திற்கு எக்மோ கருவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கபட்டு, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் உடல்நலம் பெற வேண்டும் என சினிமாப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வேண்டியுள்ளனர். எஸ்.பி.பி-க்கு தொடர்ந்து வெண்டிலேட்டர் சுவாசக் கருவி மூலம் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கூடுதலாக அவருக்கு எக்மோ கருவியும் பொருத்தப்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. அத்துடன் மருத்துவ வல்லுநர்கள் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com