தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ்

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ்
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ்

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்த அறிவிப்பை திரும்பப் பெற்றுக்கொள்வதாக அச்சங்கத்தின் தலைவர் விஷால் கூறியுள்ளார்.

முன்னதாக, இணையதளங்களில் புதிய திரைப்படங்கள் வெளியிடப்படுவதை தடுக்க வலியுறுத்தி மே 30-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் நடத்தவுள்ளோம் என திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்திருந்தார். இதனால் திரையரங்கிலும் படம் ஓடாது, படப்பிடிப்பும் நடக்காது என கூறியிருந்தார். இந்த வேலைநிறுத்தத்தால்ப பல தயாரிப்பாளர்கள், பட வெளியீட்டை மாற்றியமைத்து வந்தார்கள். இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இந்நிலையில் திரைப்படத்துறையினர் சார்பில் வரும் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் தலைமையில் நடைபெற்ற தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் போராட்டத்தை வாபஸ் பெறுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com