“அண்ணி ஜோதிகாவுடன் முதன்முறையாக நடிக்கிறேன்” - கார்த்தி உற்சாகம்

“அண்ணி ஜோதிகாவுடன் முதன்முறையாக நடிக்கிறேன்” - கார்த்தி உற்சாகம்

“அண்ணி ஜோதிகாவுடன் முதன்முறையாக நடிக்கிறேன்” - கார்த்தி உற்சாகம்

இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, ஜோதிகா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

மலையாளத்தில் ‘த்ரிஷியம்’ என்ற த்ரில்லர் திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஜித்து ஜோசப். இப்படம் மலையாளத்தில் மட்டுமின்றி பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் இது வெளியானது.

தற்போது இயக்குநர் ஜித்து ஜோசப், நடிகர் கார்த்தியை வைத்து படம் இயக்க உள்ளார். இந்தப் படத்தில் நடிகை ஜோதிகாவும் நடிக்க உள்ளார். தனது அண்ணன் சூர்யாவின் மனைவியான ஜோதிகாவுடன் இதுவரை கார்த்தி நடித்ததில்லை. இந்தத் திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக தன் அண்ணியான ஜோதிகாவுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். இதில் கார்த்திக்கு ஜோதிகா ஜோடி இல்லை என்றும், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தின் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. படத்தின் பெயரை குறிப்பிடாமல் ஒரு போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இது த்ரில்லர் வகையாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் கார்த்தி, ''முதன்முறையாக அண்ணியுடன் சேர்ந்து நடிக்க இருக்கிறேன். உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்துடன் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது'' என்று தெரிவித்துள்ளார். 

அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் சூர்யா ''இது ஒரு சிறப்பான தருணம். உன்னையும், 'ஜோ'வையும் திரையில் ஒன்றாக பார்ப்பது உற்சாகமாக இருக்கிறது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்'' எனத் தெரிவித்துள்ளார். இந்த திரைப்படம் இந்த வருடத்தின் அக்டோபரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com