மூன்று முறை தேசிய விருதுகளை வென்ற பிரபல நடிகை சுரேகா சிக்ரி உயிரிழப்பு

மூன்று முறை தேசிய விருதுகளை வென்ற பிரபல நடிகை சுரேகா சிக்ரி உயிரிழப்பு

மூன்று முறை தேசிய விருதுகளை வென்ற பிரபல நடிகை சுரேகா சிக்ரி உயிரிழப்பு
Published on

பாலிவுட் நடிகை சுரேகா சிக்ரி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

பாலிவுட் நடிகையான சுரேகா சிக்ரி 1978-ஆம் ஆண்டு அரசியல் திரைப்படமான ’கிசா குர்சி கா’ என்ற படத்தில் அறிமுகமானார். தொடர்ச்சியாக பல்வேறு பாலிவுட் படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் துணை நடிகையாக நடித்து வந்தார்.கடந்த 1988-ஆம் ஆண்டு வெளியான ‘ தமஸ்’, 1995-ஆம் ஆண்டு வெளியான ‘மம்மோ’, கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ’பதாய் ஹோ’படத்திற்காக மூன்று முறை சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதுகளை வென்றுள்ளார். மேலும், ஒரு ஃபிலிம் ஃபேர் விருதையும் வென்றுள்ளார்.

இவர் நடித்த ’பதாய் ஹோ’ சூப்பர் ஹிட் அடித்ததால் தற்போது, போனி கபூர் தயாரிப்பில் ’வீட்ல விசேஷங்க’ என்ற தலைப்பில் ஆர்.ஜே பாலாஜி தமிழில் ரீமேக் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏராளமான இந்தி மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ள சுரேகா சிக்ரி தொலைக்காட்சித் தொடரில் நடித்தபோது தலையில் அடிப்பட்டு மூளைப் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையின் தொடர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டவர் இன்று மாரடைப்பு ஏற்பட்டு காலையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 75 ஆகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com