நான் அப்படி சொல்லவேயில்லை: பிரகாஷ்ராஜ் விளக்கம்

நான் அப்படி சொல்லவேயில்லை: பிரகாஷ்ராஜ் விளக்கம்

நான் அப்படி சொல்லவேயில்லை: பிரகாஷ்ராஜ் விளக்கம்
Published on

திரைப்பட நடிகர்கள் அரசியலுக்கு வருவது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ்ராஜ், திரைப்பட நடிகர்கள் அரசியல் தலைவர்களானால் நாட்டிற்கு பேரழிவு என தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தொடர்பாக நேரடியாக பேசி வரும் நிலையில் பிரகாஷ்ராஜின் இந்த கருத்து முக்கியமானதாக கருதப்பட்டது.

இந்த நிலையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது பேரழிவு எனக்கூறியதாக வெளியான தகவலுக்கு பிரகாஷ்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த செய்தி குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அந்த கருத்திற்கு ‘நீங்கள் சொன்னதை எப்படி சிதைக்கிறார்கள்’ என்று தலைப்பிட்டுள்ளார்.

பிரகாஷ்ராஜ் அந்த ட்விட்டர் பதிவில், “இதுதான் நான் சொன்னது.. பிரபலமானவர்கள் என்பதாலே நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது. இதுஒரு பேரழிவு. நாடு எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து தெளிவான நிலைப்பாட்டுடன் அரசியலில் இறங்க வேண்டும். மக்களின் நம்பிக்கையை பெறவேண்டும். நாம் ரசிகனாக அல்லாமல் ஒரு குடிமகனாக வாக்களிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com