”அஜித் சார் என்னை நடத்திய விதம் நானே 'வலிமை’ ஹீரோ என்ற உணர்வைத் தந்தது": கார்த்திகேயா

”அஜித் சார் என்னை நடத்திய விதம் நானே 'வலிமை’ ஹீரோ என்ற உணர்வைத் தந்தது": கார்த்திகேயா
”அஜித் சார் என்னை நடத்திய விதம் நானே 'வலிமை’ ஹீரோ என்ற உணர்வைத் தந்தது": கார்த்திகேயா

’வலிமை’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் நடிகர் கார்த்திகேயா ‘வலிமை’ படம் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.

 எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பாலிவுட் நடிகை  ஹீமா குரேஷி ஹீரோயினாக நடித்துள்ளார். யுவன் இசையமைக்க தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்திருக்கிறார். ‘வலிமை’ பொங்கலையொட்டி வரும் நிலையில் கார்த்திகேயா ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். 

அப்போது பேசிய அவர், "முதலில் அஜித் சாருடன் நடிக்கும் வாய்ப்பை  நினைத்து அதிர்ச்சியடைந்தேன். எச்.வினோத் சாருக்கோ அல்லது அஜித் சாருக்கோ என்னைத் தெரியும் என்று எனக்குத் தெரியாது. இருவரும் தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர்கள். நான் தெலுங்கில்தான் ஆரம்பித்தேன். உண்மையை சொல்லவேண்டும் என்றால் வலிமை பைக் ரைடிங் படம் இல்லை. படத்தில் பைக் துரத்தல் காட்சிகள் உள்ளன. முழுக்க முழுக்க இது ஒரு வித்தியாசமான ஆக்‌ஷன் திரைப்படம்.

 படத்தின் செட்டில் அஜித் சாரை முதன்முதலாக சந்தித்தபோது அவரிடம் என்ன சொல்வது, இவ்வளவு பெரிய நடிகரை எப்படி அணுகுவது, மொழித் தடை என பல சந்தேகங்கள் எனக்குள் ஓடிக்கொண்டிருந்தன. ஆனால், அஜித் சாரின் சிறந்த அம்சம், படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவரையும் எப்படி உணர வைக்கிறார் என்பதுதான், முக்கியமானது. அவர், என்னை நடத்திய விதம் நானே படத்தின் ஹீரோ என்ற உணர்வை ஏற்படுத்தியது. படப்பிடிப்புக்கு வந்ததும் அனைத்து ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களையும் வாழ்த்தி, எல்லோரிடமும் நல்ல விஷயங்களைச் சொல்லி, மொத்த யூனிட்டையும் முக்கியமானதாக உணர வைப்பார். இது படப்பிடிப்பில் உள்ள அனைவருக்கும் உரிமையுணர்வைக் கொடுத்து அதையொட்டி, அவர்கள் படத்திற்கு தங்களால் இயன்றதைத் தருகிறார்கள். ஒரு நல்ல மனிதராக எப்படி இருக்க வேண்டும் என்று அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்," என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com