நடிகை நிலானி மீது வழக்குப்பதிவு

நடிகை நிலானி மீது வழக்குப்பதிவு

நடிகை நிலானி மீது வழக்குப்பதிவு

உதவி இயக்குநர் தற்கொலையால் சர்ச்சையில் சிக்கிய சின்னத்திரை நடிகை நிலானி மீது மதுரவாயல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சின்னத்திரையில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த காந்தி என்ற லலித்குமார், சில தினங்களுக்கு‌‌ முன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். நடிகை நிலானி நெருக்கமாக பழகிவிட்டு திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது.ஆனால் அதை மறுத்த நிலானி, லலித்குமாரின் தற்கொலைக்கு தான் காரணம் அல்ல என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விளக்கம் அளித்தார். 

இதைத் தொடர்ந்து அவரும் தற்கொலைக்கு முயற்சி செய்தார். பின் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையி‌ல், தற்கொலைக்கு முயற்சி செய்த சின்னத்திரை நடிகை நிலானி மீது மதுரவாயல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com