கதை திரைக்கதை வசனம் எழுதி ஹீரோவாக நடிக்கும் யோகிபாபு- படப்பிடிப்பு பூஜை தொடக்கம்

கதை திரைக்கதை வசனம் எழுதி ஹீரோவாக நடிக்கும் யோகிபாபு- படப்பிடிப்பு பூஜை தொடக்கம்

கதை திரைக்கதை வசனம் எழுதி ஹீரோவாக நடிக்கும் யோகிபாபு- படப்பிடிப்பு பூஜை தொடக்கம்
Published on

யோகிபாபு கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதி ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு, காமெடி கதாபாத்திரங்கள் தாண்டி நாயகனாகவும் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை, மற்றும் வசனம் எழுதி படத்தின் நாயகனாகவும் நடிக்க உள்ளார்.

2016ல் வெளியான வில் அம்பு படத்தை இயக்கிய ரமேஷ் சுப்ரமணியம் இப்படத்தை இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கியுள்ளது.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகிபாபு ஹீரோவாக நடித்த 'மண்டேலா' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கூடவே தேசிய விருதும் வென்றது. எனவே தொடர்ந்து யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் படங்களும் அதிகரித்து வருகிறது. பொம்மை நாயகி, பூமர் அங்கிள், ஷூ என யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ள படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com