ஆகஸ்ட் 21 -ல் கொல்கத்தாவில் தொடங்கும் ‘அண்ணாத்த’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பு

ஆகஸ்ட் 21 -ல் கொல்கத்தாவில் தொடங்கும் ‘அண்ணாத்த’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பு
ஆகஸ்ட் 21 -ல் கொல்கத்தாவில் தொடங்கும் ‘அண்ணாத்த’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பு

ரஜினியின் ’அண்ணாத்த’ இறுதிகட்டப் படப்பிடிப்பு ஆகஸ்ட் 21 முதல் கொல்கத்தாவில் தொடங்கவிருக்கிறது.

'தர்பார்' படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி ’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் 'அண்ணாத்த' படத்தில் நடித்து முடித்துள்ளார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4-ஆம் தேதி படம் வெளியாகிறது.

சென்னையில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, பின் ஹைதராபாத், மேற்குவங்கம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றதைத் தொடர்ந்து கடந்த வாரம் முதல் லக்னோவில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், ’அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்துக்கொண்டு படக்குழுவினர் வரும் 21 ஆம் தேதி கொல்கத்தா செல்கின்றனர். அங்கு சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அத்துடன், படத்திற்கான முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என படக்குழு தரப்பில் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com