‘கடவுளே எங்களை சரியான திசையில் வழிநடத்தியமைக்காக நன்றி’-நடிகர் சுஷாந்தின் சகோதரி ஸ்வேதா

‘கடவுளே எங்களை சரியான திசையில் வழிநடத்தியமைக்காக நன்றி’-நடிகர் சுஷாந்தின் சகோதரி ஸ்வேதா
‘கடவுளே எங்களை சரியான திசையில் வழிநடத்தியமைக்காக நன்றி’-நடிகர் சுஷாந்தின் சகோதரி ஸ்வேதா

பாலிவுட் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவர் சுஷாந்த் சிங் ராஜ்புட். ‘எம்.எஸ்.தோனி’ படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர். கடந்த ஜூன் மாதம் அவர் தற்கொலை செய்து கொண்டார். 

அவரது காதலி நடிகை ரியா சக்கரவர்த்தி தான், சுஷாந்தின் தற்கொலைக்கு காரணம் என குற்றம்சாட்டி போலீசில் புகார் அளித்திருந்தனர் சுஷாந்தின் குடும்பத்தினர். 

இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்து வரும் சூழலில் நடிகை ரியா சக்கரவர்த்தியின் சகோதரர் ஷோவிக் சக்கரவர்த்தியை, தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடிகர் சுஷாந்திற்கு போதை பொருள் கொடுத்ததாக நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சுஷாந்த் வீட்டை நிர்வகித்து வந்த மேலாளர் சாமுவேல் மிரண்டவும் கைது செய்யப்பட்டுள்ளார்.  

இதனையடுத்து தனது சகோதரர் தற்கொலை வழக்கு தொடர்பான விசாரணையில், தங்களை சரியான திசையில் வழிநடத்தியமைக்காக கடவுளுக்கு நன்றி சொல்லி ட்வீட் போட்டுள்ளார் சுஷாந்தின் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com