ஊரடங்கு நாட்களில் அஜித் வளர்த்த பூந்தோட்டம்... எத்தனை வகை பூக்கள் தெரியுமா?

ஊரடங்கு நாட்களில் அஜித் வளர்த்த பூந்தோட்டம்... எத்தனை வகை பூக்கள் தெரியுமா?
ஊரடங்கு நாட்களில் அஜித் வளர்த்த பூந்தோட்டம்... எத்தனை வகை பூக்கள் தெரியுமா?

கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நாட்களை சமாளிப்பதில் மக்கள் அதிகம் சிரமப்பட்டனர். அந்த நாட்கள் பிரபலங்களில் சிலருக்கு பெரும் கொடையாக அமைந்துவிட்டன. அஜித்தோ ஒரு புதிய பொழுதுபோக்கை அடைந்துள்ளார்.

ஏற்கெனவே பைக், புகைப்படக்கலை, துப்பாக்கிச்சுடுதல், சமையல், ட்ரோன் என விதவிதமாக தனக்குப் பிடித்த விஷயங்களில் ஈடுபடும் அஜித்குமார், புதிதாக பூந்தோட்டம் வளர்க்கத் தொடங்கியுள்ளார். வீட்டுக்குப் பின்புறத்தில் வைத்துள்ள தோட்டத்தில், 75 வகையான பூக்கள் மற்றும் மூலிகைச் செடிகளை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



சென்னையில் ட்ரோன்கள் மூலம் கிருமிநாசினி தெளிப்பதில் ஐஐடியின் தக்சா குழுவினருக்கு உதவியாக இருந்தார். வலிமை படப்படிப்பும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், வீட்டில் ஓய்வாக இருந்த அஜித் நேரத்தை வீணடிக்காமல் பூந்தோட்டம் வளர்த்துள்ளார். கொரோனா பரவல் ஓரளவுக்கு முடிவுக்கு வந்ததும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com