வாக்குமூலம் அளித்த தனுஸ்ரீ தத்தா.. நானா படேகர் மீது நடவடிக்கை ?

வாக்குமூலம் அளித்த தனுஸ்ரீ தத்தா.. நானா படேகர் மீது நடவடிக்கை ?

வாக்குமூலம் அளித்த தனுஸ்ரீ தத்தா.. நானா படேகர் மீது நடவடிக்கை ?
Published on

திரைப்பட நடிகர் நானா படேகர் உள்பட 4 பேர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா அளித்த பாலியல் புகாரையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் நானா படேகர், நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீ சித்திக், இயக்குநர் ராகேஷ் சரங் ஆகியோர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா மும்பை காவல்நிலையத்தில் கடந்த 6-ம் தேதி புகார் அளித்திருந்தார். கடந்த 2008-ம் ஆண்டு திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பின்போது நடிகர் நானா படேகர் உள்ளிட்டோர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர் என்பது அவரின் புகாராக இருந்தது. இக்குற்றச்சாட்டை நானா படேகர் உள்ளிட்டோர் மறுத்துள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் நால்வர் மீதும் 354, 509 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் தொடர்பாக ஒஷிவாரா காவல்நிலையத்துக்கு நேற்றிரவு சென்ற தனுஸ்ரீ தத்தாவிடம் புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அவர் அளித்த வாக்குமூலத்தை காவல்துறையினர் பதிவு செய்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com