அக்‌ஷராவின் அந்தரங்கப் புகைப்படங்களை வெளியிட்டேனா? காதலன் விளக்கம்!

அக்‌ஷராவின் அந்தரங்கப் புகைப்படங்களை வெளியிட்டேனா? காதலன் விளக்கம்!
அக்‌ஷராவின் அந்தரங்கப் புகைப்படங்களை வெளியிட்டேனா? காதலன் விளக்கம்!

நடிகை அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்கப் புகைப்படங்களை வெளியிட்டதாகக் கூறப்பட்ட விவகாரத்தில் அவரது முன்னாள் காதலர் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன். இவர் அமிதாப் மற்றும் தனுஷ் நடித்த ’ஷமிதாப்’ என்ற இந்தி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் அஜீத்தின் ’விவேகம்’ படத்திலும் நடித்திருந்தார். இவரது அந்தரங்க புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைத்தளங் களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த அவர், மும்பை போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அக்‌ஷராவுக்கு போன் செய்து விசாரித்தேன். அவர், ’இது உன் வேலையா?’ என்று கேட்டார். இல்லை என்றேன்

நடிகை அக்‌ஷராவும் முன்னாள் ஹீரோயின் ரதியின் மகன் தனுஜ் விர்வானியும் (2013-2017) காதலித்து வந்தனர். பின்னர் கடந்த வருடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். அக்‌ஷராவின் அந்தரங்க புகைப்படங்களை அவர்தான் வெளியிட்டிருக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக அவரிடம் போலீஸ் விசாரணை நடத்த இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இதுபற்றி தனுஜ் விர்வானி கூறும்போது, ‘என்னிடம் போலீசார் எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை. விசாரணை செய்தால் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கத் தயாராக இருக்கிறேன். நவம்பர் 2 ஆம் தேதி அவரது இந்த புகைப்படங்கள் வெளியானது பற்றி அறிந்தேன். உடனடியாக அக்‌ஷராவுக்கு போன் செய்து விசாரித்தேன். அவர், ’இது உன் வேலையா?’ என்று கேட்டார். இல்லை என்றேன். இதுபற்றி போலீசில் புகார் செய்ய இருக்கிறேன் என்றார். செய் என்றேன்.

இல்லையென்றால், யார் இந்த புகைப்படங்களை வெளியிட்டது என்பது தெரியாமல் போய்விடும் என்றேன். நாங்கள் பிரிந்து நீண்ட காலம் ஆகிவிட்டது. அதனால் அவரது புகைப்படங்களை நான் பரப்ப வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது. என்னிடம் இருந்த அவரது புகைப் படங்களை நான் அழித்துவிட்டேன். எங்கள் இருவருக்கும் காதலித்தபோதும் பிரிந்த போதும் எந்த கசப்பான சம்பவங்களும் நடக்கவில்லை. இது அக்‌ஷராவுக்கும் தெரியும்’ என்று தெரிவித்தார்./p>

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com